மருத்துவ மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ மேற்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் வழங்கும் இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஒரு பிரிவுக்கு மட்டும் காட்டப்படும் பாகுபாடாகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், சமூகநீதிக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேதம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், சமூகநீதிக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேதம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment