இன்ஜினியரிங் சேர்க்கை பதிவு துவக்கம் செப்., 10 முதல் கவுன்சிலிங் ஆரம்பம்
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. செப்., 10ல், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதியை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று அறிவித்தார்.அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. செப்., 10ல், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதியை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று அறிவித்தார்.அவர் அளித்த பேட்டி:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், விரைவில் வர உள்ளன. பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் வழியாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
மாணவர்கள், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்; ஆக., 16ல் பதிவுக்கு கடைசி நாள்.இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, அக்., 15 வரை நடத்தலாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்துள்ளது.
மாணவர்கள், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்; ஆக., 16ல் பதிவுக்கு கடைசி நாள்.இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, அக்., 15 வரை நடத்தலாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, கவுன்சிலிங் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.கடந்த ஆண்டில், தமிழகம் முழுதும், 46 சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில், 8,000 பேர் விண்ணப்ப பதிவுகளை மேற்கொண்டனர். இந்த ஆண்டில், கூடுதலாக ஆறு மையங்களுடன் சேர்த்து, மொத்தம், 52 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை, மொபைல் போன் வழியே, ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.இந்த ஆண்டு, 465 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை, மொபைல் போன் வழியே, ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.இந்த ஆண்டு, 465 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
ஜூலை, 31 வரை அனுமதி கேட்டு, கல்லூரிகள் விண்ணப்பம் அளிக்கலாம். எனவே, இன்னும் கூடுதல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்கு முன்வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நிலவரம்கடந்த ஆண்டில், 470 கல்லூரிகள் அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கை நடத்தின. அவற்றில் மொத்தம், 1.43 லட்சம் இடங்களுக்கு, 1.33 லட்சம் பேர் பதிவு செய்தனர்; 1.03 லட்சம் பேர் தகுதி பெற்றனர்
அவர்களில், 83 ஆயிரம் பேர், இடங்களை தேர்வு செய்தனர்.அதேபோல், 2018 - 19ம் கல்வி ஆண்டில், 509 கல்லூரிகளில், 1.58 லட்சம் இடங்களுக்கு, 59.5 சதவீத இடங்கள் நிரம்பின.
அவர்களில், 83 ஆயிரம் பேர், இடங்களை தேர்வு செய்தனர்.அதேபோல், 2018 - 19ம் கல்வி ஆண்டில், 509 கல்லூரிகளில், 1.58 லட்சம் இடங்களுக்கு, 59.5 சதவீத இடங்கள் நிரம்பின.
இந்த ஆண்டு, முந்தைய இரண்டு ஆண்டுகளை விட, கூடுதல் மாணவர்கள், இன்ஜினியரிங் சேர்க்கை பெற வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.சான்றிதழ் சரிபார்ப்பு வசதிபொதுப் பிரிவு மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது; இந்த ஆண்டும், அதேபோன்று சரிபார்க்கப்படும். மொபைல் போன் பயன்படுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர் வாரிசுகளுக்கு, நேரில் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர் வாரிசுகளுக்கு, நேரில் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விளையாட்டு பிரிவில் இடங்களை ஒதுக்கீடு பெறுபவர்கள் மட்டும், நேரில் சேவை மையங்களுக்கு சென்று, சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment