பாட புத்தக வினியோகம் அரசு பள்ளியில் துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 15, 2020

பாட புத்தக வினியோகம் அரசு பள்ளியில் துவக்கம்

பாட புத்தக வினியோகம் அரசு பள்ளியில் துவக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் துவங்கியது.
தமிழக பள்ளி கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் தயாராகியுள்ளன. இந்த புத்தகங்கள், மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

அவை, ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனி பண்டல்களாக ஆசிரியர்களால் பிரித்து வைக்கப்பட்டன. நேற்று முன்தினம், முதல்வர் இ.பி.எஸ்., பாடப் புத்தக வினியோகத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, நேற்று முதல் பாடப் புத்தகங்களை வழங்கும் பணி துவங்கியது. 

பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டன. முதலில், பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மேலும், இலவச,'லேப்டாப்'பில் பாடங்கள் பதிவிறக்கம் செய்தும் தரப்பட்டன. சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்வில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்று, புத்தகங்களை வழங்கினார்.

No comments:

Post a Comment