தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி

தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி
தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

வழக்கின் முந்தையை விசாரணையில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசு, 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.  

அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறந்த பிறகு 25%, பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment