மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகளில், அரிசி, பருப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஆர்.சுதா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, மதிய உணவு கிடைப்பது இல்
சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகளில், அரிசி, பருப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஆர்.சுதா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, மதிய உணவு கிடைப்பது இல்
.இந்த நேரத்தில், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க, குழந்தைகளின் வீடுகளுக்கு சென்றோ அல்லது ரேஷன் கடைகளில் சத்தான உணவுப் பொருள் வழங்கவோ ஏற்பாடு செய்யலாம்.எனவே, மதிய உணவு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், 'அம்மா' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மணு , நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை, வரும், 30ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில், மனுவுக்கு, சமூக நலத்துறை செயலர், மதுமதி தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், 43 ஆயிரத்து, 246 சத்துணவு மையங்கள் வழியாக, 48.56 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். அவர்களுக்கு, பள்ளி வேலை நாட்களில், முட்டையோடு சேர்த்து சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படுகிறது.
வைரஸ் அச்சுறுத்தலால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ரேஷன் பொருட்களுடன் முட்டை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்தது. அழியக்கூடிய தன்மை உள்ளதால், பெற்றோர், குழந்தைகளை வரவழைத்து முட்டை வழங்க இயலாது.
வைரஸ் அச்சுறுத்தலால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ரேஷன் பொருட்களுடன் முட்டை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்தது. அழியக்கூடிய தன்மை உள்ளதால், பெற்றோர், குழந்தைகளை வரவழைத்து முட்டை வழங்க இயலாது.
தற்போதைய நிலையில், முட்டை கொள்முதல் செய்து, கொண்டு வருவது என்பதும் சரியல்ல. எனவே, வழக்கமாக வழங்கப்படும் அளவோடு, கூடுதல் அளவில் பருப்பு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு விட்டதால், அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டையை, பயனாளிகளின் வீடுகளுக்கே ஊழியர்கள் சென்று வழங்குகின்றனர்.
இதில், 33.12 லட்சம் பயனாளிகள் பயனடைகின்றனர்.ஊரடங்கு காலத்தில், மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க, முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.
இதில், 33.12 லட்சம் பயனாளிகள் பயனடைகின்றனர்.ஊரடங்கு காலத்தில், மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க, முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.
அதன்படி, குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு வழங்க, சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பெற்றோரிடம் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment