இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 29, 2020

இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை

இடையில் ஓரிரு வருடங்கள் 'பிரேக்' எடுத்து இன்ஜினியரிங்' படிக்கலாம் - புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக் கொள்கையின் மூலம் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி பொறியியல் போன்ற உயர்படிப்புகளை ஓரிரு வருடங்கள் இடைவெளியுடன் படிக்கலாம் எனப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வரும் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, புதிய கல்விக்கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அறிவித்தார். அதன்படி, பொறியியல் போன்ற உயர்படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் என்றார்

15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும் எனவும், தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NRF) அமைப்படுவதாகவும் கூறினார்.

புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் என தெரிவித்த அவர், 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை என்று குறிப்பிட்டார். மேலும், புதிய கல்விக் கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment