இலவச லேப்டாப் பாதுகாப்பு பிரச்னை முடிவுக்கு வந்தது
மதுரையில் அரசு பள்ளிகளில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்களை கல்வித்துறை திரும்ப பெற்றது.2017 --18 ல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த லேப்டாப்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மதுரையில் அரசு பள்ளிகளில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்களை கல்வித்துறை திரும்ப பெற்றது.2017 --18 ல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த லேப்டாப்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அவர்கள் தற்போது கல்லுாரி மாணவர்களாகி விட்டனர். இதனால் 2018- -19, 2019 --20ம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, தேர்ச்சி பெற்றோருக்கு மட்டும் வழங்க உத்தர விடப்பட்டது.
தோல்வியடைந்த, உயர் கல்வியை தொடராதோருக்கான லேப்டாப்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டன. சில இடங்களில் திருடுபோனதால் பாதுகாப்பு இல்லை என தலைமையாசிரியர்கள் போர்க்கொடி துாக்கினர். பாதுகாக்கவில்லை என அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவற்றை திரும்ப பெற சி.இ.ஓ., சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்கள் செயின்ட் மேரீஸ் பள்ளி பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப் பட்டன. தற்காக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் கல்வித்துறைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2017-18 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படுமா? அல்லது கொடுக்கப்படாத?
ReplyDelete