கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 18, 2020

கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதற்கிடையே, கோவை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரி விலக்கு வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இமாச்சல பிரதேச அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் கல்வி நிறுவன வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை.

 இருப்பினும், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டார் வாகன வரி செலுத்தும்படி அரசு நிர்ப்பந்தம் செய்கிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கான கட்டணங்களும் வசூலிக்க முடியவில்லை என்பதால், சாலைவரி, மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது. வரி செலுத்தாக கல்லூரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், வழக்கு குறித்து வரும் 22-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment