ஆன்லைன் வகுப்பு குறித்து அரசு நிலைப்பாடு என்ன?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 20, 2020

ஆன்லைன் வகுப்பு குறித்து அரசு நிலைப்பாடு என்ன?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் வகுப்பு குறித்து அரசு நிலைப்பாடு என்ன?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் வகுப்புகளை  நடத்துவது குறித்து தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்ன என்பது  குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.


ஆன்லைன் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புக்களை மொபைல், லேப்டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வக்கீல் விமல் மோகனும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 வழக்கு கடந்த முறை நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஜூலை 15ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்ற நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வரும் திங்கட்கிழமை பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

ஆன்லைன் வகுப்புக்களை மொபைல், லேப்டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment