இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் 73,000 பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 20, 2020

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் 73,000 பேர் விண்ணப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் 73,000 பேர் விண்ணப்பம்

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைன் மூலம் 73 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூலை 15ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை ெதாடங்கியது.


இதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி மாலையில் இருந்தே மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றத் தொடங்கினர்.

 நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 73 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றியுள்ளனர்.

அத்துடன் 51 ஆயிரத்து 525 பேர் அதற்கான கட்டணங்களையும்  ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை தொடங்கினர்.

தேர்வு முடிவு வெளியான பிறகும் விறுவிறுவென விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment