நீட் தேர்வு விவகாரத்தில் அரசு ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலா புதிய கட்சியை தொடங்கினார்
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலா பெண் விடுதலை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டும் ஆசிரிய பணிக்கு முன் உதாரணமாக விளங்கி கொண்டு இருந்தவர் சபரிமாலா ஜெயகாந்தன்.
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலா பெண் விடுதலை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டும் ஆசிரிய பணிக்கு முன் உதாரணமாக விளங்கி கொண்டு இருந்தவர் சபரிமாலா ஜெயகாந்தன்.
நீட் தேர்வு தேவையில்லை என்ற முழக்கத்தோடு தமிழகத்திலேயே முதல் அரசுப் பள்ளி ஆசிரியராக தனது 7 வயது மகனுடன் கடந்த 2017ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டார் சபரிமாலா. பின்னர் அவர் தனது ஆசிரியர் பணியையும் தூக்கி எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Neet exam is very important
ReplyDelete