தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய CEO க்கு கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 18, 2020

தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய CEO க்கு கோரிக்கை

தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய  CEO க்கு கோரிக்கை
விருத்தாசலம்; மாவட்ட தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலர், விருத்தாசலம் தமீம் அன்சாரி, சி.இ.ஓ.,வுக்கு அனுப்பியுள்ள மனு:மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பின்தங்கியுள்ளது. 

சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி, கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோரை வலியுறுத்தி வருகின்றன.எனவே, கல்விக் கட்டணத்தை எளிய முறையில் மாணவர்கள் செலுத்திட வழிவகை செய்ய வேண்டும். 

மேலும், 1, 2, 3ம் வகுப்பு குழந்தைகளுக்கும் சில பள்ளிகளில் ஆன்லைனில் வகுப்பு நடத்துகின்றனர். இதனால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிப்பதால், தனியார் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment