B.E RANDAM NUMBER ஐ வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர்
பொறியியல் கலந்தாய்வலில் பங்கேற்கும் மாணவா்களுக்கான ரேண்டம் எண்ணை உயா்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் முடிவுகள் செப்டம்பர் 8, 9-ல் வெளியிடப்படும் என கூறினார்.
மேலும் 1,31,436 மாணவா்களின் தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,31,436 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
தமிழக பொறியியல் கல்லூரியில் பி.இ. இடங்களின் மொத்த எண்ணிக்கை 1,61,877 பேர் என அமைச்சர் அறிவித்தார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களின் தரவரிசைப்பட்டியல் செப்படம்பர் 17-ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.
பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள 1,31,436 பேருக்கு சமவாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். பி.இ படிப்புகளில் சேர 1 லட்சத்து 60,834 போ் விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நடப்பு கல்வி ஆண்டில் உயர்த்தப்படாது எனவும் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரேண்டம் எண் வெளியிடபட்டது.
ஒரே மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை ஏற்படுத்தும் 10 இலக்கு எண் வெளியிடப்பட்டது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனைத்து பதிவு செய்த மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment