இந்த நாட்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

இந்த நாட்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன

 இந்த நாட்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன

இலங்கையில் 4 மாதங்களுக்கு பின் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன.


இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


ஆனால், கொரோனா வேகத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவம் கருதி, சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இலங்கையில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.


200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி, முன்புபோல் இயங்கலாம். 200 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்து செயல்படலாம். ஆனால், பள்ளி உணவகம் திறக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment