தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 17, 2020

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

 தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்ட் நிறுத்திவைப்பு: பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பிஇ, பிடெக் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பருவத் தேர்வு அடிப்படையில் கடந்த வாரம் வெளியானது. 

இந்நிலையில் பல்கலைக் கழக இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முயன்றபோது, பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக (W.H.13) என்று வருகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இது குறித்து பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாகவது:

அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் பார்க்கும் போது பலருக்கு, கட்டணம் செலுத்தவில்லை என்று வருகிறது. அதாவது தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணத்தை செலுத்தவில்லை என்று பலர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலித்துள்ளனர். ஆனால், அந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அந்த கட்டணத்தை செலுத்தவில்லை. முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் ஒரு பாடத்துக்கு தலா ரூ.150 என கட்டணம் செலுத்தியுள்ளனர்.


அதன்படி 8 அல்லது 9 பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் கொடுத்துவிட்டோம். இந்த கட்டணத்தை கணக்கிட்டால் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வசூல் செய்த தனியார் கல்லூரிகள் அந்த பணத்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு செலுத்தாததால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தவிர அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். அவர்கள் இந்த படிப்புகளில் சேரும் போது ஆண்டுக் கட்டணமாக மொத்தமாக சேர்த்து ரூ.14 ஆயிரம் என்று கட்டணம் செலுத்தியுள்ளனர்.


இதற்கிடையே, கட்டணம் தொடர்பான வழக்கில் முதலில் 40 சதவீத கட்டணத்தை வாங்க வேண்டும். பின்னர் தலா 30 சதவீதமாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தை காட்டி, தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்திவைத்துள்ளது. 

அதேபோல, தற்போது, பிஎச்டிபடிக்கும் மாணவர்களிடம் இருந்தும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் கேட்டு வருவதாகக ஆய்வு மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து உயர்கல்வித்துறை விசாரித்து உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அனைதது தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment