பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் குழப்பம் - அரசு விரிவான விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் குழப்பம் - அரசு விரிவான விளக்கம்

 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் குழப்பம் - அரசு விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் நடத்தி, தேவையான கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அனைவரும் தேர்ச்சி என அறிவித்துவிட்டதால் தற்போது மதிப்பெண் விபரங்கள் மட்டும் வெளியாகியுள்ளன.


9,39,829 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய நிலையில், 4,71,759 மாணவர்களும், 4,68,070 மாணவியரும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6,235 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆனால், தேர்வெழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் நிலவியது. 

27.3.2020 அன்று தேர்வுத்துறை வெளியிட்ட விவரங்களின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 9,45,006 என குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்வுத்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 9,39,829 என உள்ளது.

மீதமுள்ள 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்? என்று கேள்வி எழுந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நியூஸ் 18-ல் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக தமிழக அரசு விளக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வெழுத தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9,45,077. 

231 பேர் தேர்வெழுத பதிவு செய்த பின்னர் இயற்கை எய்தியுள்ளனர்.

658 பேர் மாற்றுச்சான்றிதல் பெற்று பள்ளியை விட்டு நின்றுள்ளனர். 4359 பேர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடங்களை கூட எழுதவில்லை. 

எனவே, இந்த காரணங்களில் உள்ள 5248 பேரை கழித்து, 9,39,829 பேருக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment