காந்திகிராம பல்கலையில் இணையவழி வகுப்புகள் தொடக்கம்
திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
பல்கலையில் தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு ஆக.17 ம் தேதி முதல் இணைய வழி வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.பதிவாளர் சிவக்குமார் அறிக்கை:
பேராசிரியர்கள் தங்கள் வகுப்புக்கான விரிவுரையை காணொலி அல்லது குறிப்புகளாக தயார் செய்து பல்கலை இணையதளத்தில் உள்ள இணையமுகப்பு பக்கத்தில் பதிவேற்றம் செய்யவும், அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்னஞ்சல் மூலமாக பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment