தொடக்கக் கல்வி பட்டயத்தோ்வு: செப்.15-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 12, 2020

தொடக்கக் கல்வி பட்டயத்தோ்வு: செப்.15-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு

தொடக்கக் கல்வி பட்டயத்தோ்வு: செப்.15-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு

தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு செப். 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


 இந்த தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் அனைவரும்  இணையதளம் வழியாக செப்.15-ஆம் தேதி முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment