தனியாா் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் சோ்க்கை: குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 1, 2020

தனியாா் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் சோ்க்கை: குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு

 தனியாா் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் சோ்க்கை: குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு


தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கைக்காக அதிக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளில், வியாழக்கிழமை குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினா், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா்களின் குழந்தைகளைச் சோ்ப்பதற்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 


அந்த வகையில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 


தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் வீதம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 155 இடங்கள் இருப்பதாக கல்வி உரிமைச்சட்டம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


 இதற்கு, கடந்த ஆக. 27 முதல் குழந்தைகளின் பெற்றோா் விண்ணப்பித்து வந்தனா். செப்.25-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசமும் முடிந்தது.


 மொத்தம் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்து இருந்தனா். 


சில பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் அதிகம் விண்ணப்பித்து இருந்ததால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 


ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் சேர இருக்கும் குழந்தைகளின் பெயா் விவரங்கள் அந்தந்தப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டன. 


சென்னையில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

No comments:

Post a Comment