அரசின் கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் கிரண் குராலா செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் புதிய வேண்டும். நவம்பர் 30ம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் புதிதாக கோருபவர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பர் 15ம் தேதியில் இருந்து கல்வி உதவித்தொகை இணையதளத்தில், புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 15 தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை ஜனவரி 31ம் தேதிக்கு முன்பும் கேட்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment