நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 18, 2020

நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

 நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை


நீட் முறைகேட்டில் ஈடுபட்டோரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது.


நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்தது தொடர்பான வழக்கில்  15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி கைது செய்தது.


இதில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை வைத்து, விபரங்களைத் தருமாறு  சிபிசிஐடி ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.


இந்நிலையில் குறிப்பிட்ட பத்து பேரின் புகைப்பட  விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் சிபிசிஐடிக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் சிபிசிஐடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment