அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: எஞ்சியுள்ள இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 9, 2020

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: எஞ்சியுள்ள இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: எஞ்சியுள்ள இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவா் சோ்க்கை குறைந்ததால், எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.


 இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கு 16-ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் 27,721 போ் விண்ணப்பித்தனா்


இதையடுத்து கல்லூரிகள் அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பா் 11-ம் தேதி மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. தற்போது கலந்தாய்வில் மிக குறைந்தளவிலான இடங்களே நிரம்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து தொழில்நுட்பக்கல்வி அதிகாரிகள் கூறியது: ‘கரோனா பரவலால் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடப்பாண்டு இணையவழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. எனினும், வேலைவாய்ப்பின்மை, கலந்தாய்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 


இதனால் மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு 2-ஆவது சுற்று கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனா்.

No comments:

Post a Comment