ஆறு மாவட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 600 அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார உத்தரவுகள் வழங்கும் விழா மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் இன்று (நவ.,7) நடக்கிறது.
கல்வித்துறை நடத்தும் இவ்விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுகளை வழங்குகிறார்
இணை இயக்குனர் கோபிதாஸ் வரவேற்கிறார்.அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், கலெக்டர் அன்பழகன் மற்றும் ஆறு மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மதுரை சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment