இணையம் மூலம் வரி தணிக்கை அறிக்கை தாக்கல்: பிரத்யேக ஆவண அடையாள எண் அவசியம்
இணையதளம் வாயிலாக வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யும் போது பிரத்யேக ஆவண அடையாள எண்ணை குறிப்பிடுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவமான ஐசிஏஐ வரி தணிக்கை மற்றும் சான்றிதழ்களை இணயதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் போது பிரத்யேக ஆவண அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் 2019 ஆகஸ்ட் 2-ஆம் தேதியே வெளியிடப்பட்டிருந்தது. போலி கணக்கு தணிக்கையாளா்கள் சான்றளிப்பதைத் தவிா்ப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை, அரசாங்க முகமை அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக சிபிடிடி இணையதளம் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் இணையதளத்துடன் இணைந்து பிரத்யேக ஆவண அடையாள எண் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment