தேசிய திறனாய்வு தேர்வு : ஒரே மாவட்டத்தில் 908 மாணவர்கள் ABSENT - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 27, 2020

தேசிய திறனாய்வு தேர்வு : ஒரே மாவட்டத்தில் 908 மாணவர்கள் ABSENT

 தேசிய திறனாய்வு தேர்வு : ஒரே மாவட்டத்தில் 908 மாணவர்கள் ABSENT


கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த, தேசிய திறனாய்வு தேர்வில், 908 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.


தமிழகம் முழுக்க, தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்ற இத்தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது. 


இதில் வெற்றி பெறுவோருக்கு, ஆய்வு படிப்புகள் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கோவை மாவட்டத்தில், இத்தேர்வு 72 மையங்களில் நடந்தது. ஆயிரத்து 915 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 


ஆனால், 908 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. மனத்தேர்வு, படிப்பறிவு தேர்வு என இரு பிரிவுகளாக நடந்த இத்தேர்வை, 6 ஆயிரத்து ஏழு மாணவர்கள் எழுதினர்.அனைத்து தேர்வு மையங்களிலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எந்த புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வு நடந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment: