மே.4 முதல் பொதுத் தேர்வுகள் தொடக்கம்: மாநில அரசு அறிவிப்பு
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மே 4ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா காரணமாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள மூடப்பட்ட நிலையில், நோய்ப் பரவல் குறைந்ததையடுத்து முதற்கட்டமாக பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மே 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment