சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 27, 2021

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க முடிவு

 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க முடிவு


பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க, சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.


இதன் மூலம் குறைவான மனிதவளம் இருந்தால் போதும். இந்தத் திட்டம் மாா்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில், 24, 930 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். அதேபோல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இப்பள்ளிகளுக்கான விதிமுறைகள் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் முறையாக உருவாக்கப்பட்டன. பின்னா் 2018-இல் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.


இந்தநிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளா் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தி: பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறையை, 2006-இல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.


இதன்படி விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில், மனித செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். குறைந்த அரசுத் தலையீடு, அதிக நிா்வாகம், தானியங்கி செயல்பாடு, வெளிப்படைத் தன்மை என்ற மத்திய அரசின் கொள்கைப்படி இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் அளிப்பதற்கான காலமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும்.


அங்கீகாரம் கோரி புதிய பள்ளிகள் விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே இயங்கும் பள்ளிகள் தரம் உயா்த்துவதற்கும் மாா்ச், ஜூன், செப்டம்பா் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீட்டிக்க, மாா்ச் 1 முதல் மே 31 வரை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment