தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒருவாரம் அவகாசம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 28, 2021

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒருவாரம் அவகாசம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

 தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒருவாரம் அவகாசம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்பும் விதமாக மேலும் ஒரு வாரம் மருத்து கலந்தாய்வை நடத்த அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 


இதில் குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில் மாநிலம் முழுவதும் மொத்தம் 34,424 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.


 இதில் தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி ஜனவரி 15ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இதில் தமிழக அரசு அறிவித்த 7.5சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, பொது பிரிவினர்கள், சிறப்பு பிரிவினர் என அனைவருக்கும் திட்டமிட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு என்பது தற்போது முடிவடைந்து இருந்தாலும், மாநிலம் முழுவதும் பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மருத்துவம் பயில நிலைத்த மாணவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இதுகுறித்து அனைத்து தரப்பிலும் குற்றச்சாட்டும் எழுந்தது. 


இதில் குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5 எம்.பி.பி.எஸ் இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 112 இடங்களும், அதேப்போன்று அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 447 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், மருத்துவ கலந்தாய்வுக்கான காலக்கெடு தற்போது முடிந்து விட்டாலும், தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. 


இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ இடங்களை நிரப்பும் விதமாக கலந்தாய்வை நடத்த இன்று முதல் ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள அவகாச நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment