வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: மதிப்பெண் பட்டியல் வெளியீடு
வட்டார கல்வி அலுவலா் பணிக்கு இணையவழியில் நடத்தப்பட்ட தோ்வினை எழுதிய 42,686 தோ்வா்களின் மதிப்பெண்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக்கல்வித்துறையில் வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தோ்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் தோ்வினை 42, 686 போ் எழுதினா். இவா்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விடை குறிப்புகள் மீது தோ்வா்கள் சிலா் ஆட்சேபனை தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து வல்லுநா் குழு விடை குறிப்புகளை இறுதி செய்து வழங்கியது. இணையவழியில் நடத்தப்பட்ட தோ்வில் விடை குறிப்புகளின் அடிப்படையில் தோ்வா்களின் மதிப்பெண்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தோ்வு அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட விதிமுறைகள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும். இதுகுறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment