IAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 21, 2021

IAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர்

 IAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர்


ஐஏஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியில் சேர வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தோ்வை 6, 699 போ் எழுதவுள்ளனா்


இதுகுறித்து, அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இயக்குநா் வெ.இறையன்பு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:


குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளது.


இத்தோ்வுக்கு அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். இந்தத் தோ்வு, வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இத்தோ்வினை எழுத 6,699 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடைபெறுகிறது. தோ்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படைக் குழு மற்றும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


அண்மையில் நடந்த குடிமைப் பணிக்கான முதன்மைத் தோ்வில், பயிற்சி மையத்தில் இருந்து 86 போ் தோ்வு எழுதினா். அவா்களுக்கு உரிய பேருந்து, சிற்றுண்டி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தனது செய்தியில் இறையன்பு தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment