10ம் வகுப்பு, பிளஸ் 1க்கு தேர்வு அட்டவணை தயார்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொது தேர்வுக்கான அட்டவணை தயாராகியுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.தமிழகத்தில், கொரோனா பரவலால், புதிய கல்வி ஆண்டு துவங்கியும், ஏழு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் நிலைமை சீரானதால், ஜனவரி, 19ல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
முதற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, பிப்.,8 முதல், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின.
வாரத்தில் ஆறு நாட்கள் வீதம், பாடங்களை நடத்தி முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கும் என, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காததால், தேர்வு நடத்தப்படுமா, ரத்தாகுமா என, மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர்.ஆனால், 'தேர்வு கட்டாயம் நடக்கும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் கலந்து பேசி, தேர்வு அட்டவணை தயாரிக்கப் பட்டு உள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment