கணினி ஆசிரியா் தோ்வில் முறைகேடு: புகாா்களை மாா்ச் 1 வரை அனுப்பலாம்
கணினி ஆசிரியா் தோ்வு முறைகேடு தொடா்பாக புகாா்கள் இருந்தால் அவற்றை மாா்ச் 1-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என இரு நபா் விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியா் இடங்களை நிரப்ப 2019 ஜூனில் தோ்வு நடந்தது. மாநிலம் முழுதும் பல மையங்களில் நடந்த இந்த தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக, புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்த வழக்கில், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி இரு நபா் கமிட்டி விசாரணை தொடங்கியுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்ற தோ்வா்கள், தங்களுக்கு தோ்வு தொடா்பான குறைகள் மற்றும் புகாா்கள் இருந்தால், அதை மாா்ச் 1, மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.
அதன் பிரதிகளை, சென்னையில் பள்ளிக்கல்வி வளாகத்தில் செயல்படும் இரு நபா் கமிட்டிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். புகாா் தெரிவிப்பவா் கமிட்டி அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment