பொதுத்தேர்வு விபரங்கள் பதிவு செய்ய காலஅவகாசம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு பட்டியல் தயார் செய்வதற்கு, கல்வித்துறை அவகாசம் வழங்கியுள்ளது.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்களை, அரசு தேர்வுத்துறை இயக்ககத்துக்கு பதிவேற்றம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், விபரங்களை பதிவு செய்ய, பிப்., 1 முதல், 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் சில பள்ளிகளில் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலும், விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வு விபரங்களை பதிவு செய்ய, பிப்., 18ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது
No comments:
Post a Comment