சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 3, 2021

சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு

 சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு


விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


புதன்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார்.


அப்போது சாலையோரம் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகள் எடுத்து பார்த்தபோது அதில் 21 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது தெரியவந்தது.


பணத்தை தவற விட்டவர்கள் யார் என்று தெரியாததால், அதனை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று, போலீசில் ஒப்படைக்குமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்


இதனையடுத்து அவரது தாயார் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த தொகையை ஒப்படைத்தார்.


சிறுவனின் நற்குணத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அவரைப் பாராட்டி சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.

No comments:

Post a Comment