பள்ளிகள் திறப்புக்குப் பிறகு ஆசிரியா்காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 10, 2021

பள்ளிகள் திறப்புக்குப் பிறகு ஆசிரியா்காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

 பள்ளிகள் திறப்புக்குப் பிறகு ஆசிரியா்காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்


தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் உள்ளனா். பள்ளிகளைத் திறந்தபின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1240 பேருக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கிப் பேசியதாவது


தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:


வேலைவாய்ப்பு முகாமில் 1,240 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் 15 பேருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. 85 நபா்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி கிடைத்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பதில்லை என்ற தகவல் தற்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதுவாா். தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் உள்ளனா். பள்ளிகளைத் திறந்த பின்பு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.


நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் வீரராகவ ராவ், கோவை மண்டல இணை இயக்குநா் லதா, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் மகேஸ்வரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

No comments:

Post a Comment