உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு
தேர்தல் பாதுகாப்பு காரணமாக, இரண்டாம் நிலை போலீசாரை தேர்வு செய்வதற்கான உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 11 ஆயிரத்து, 741 இரண்டாம் நிலை போலீசாரை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு, வரும், 8ல், உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க இருந்தன
.போலீஸ் அதிகாரிகள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ஏப்., 12க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment