தேர்தல் பணி: அரசு பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
தேர்தல் பணிகளுக்காக, அரசுப்பள்ளிகளில் உள்ள கணினி, லேப்டாப், இணையதள வசதி குறித்த, தகவல் சேகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களை, இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் இணையதள வசதி தேவைப்படுவதால், அந்தந்த பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்த, தகவல்கள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுசார்ந்து, பள்ளிகளில் தகவல் பெறும் பணிகள் நடக்கின்றன
No comments:
Post a Comment