பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 11, 2021

பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை

 பிளஸ்2 தேர்வு குறித்து பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை


பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து, இரண்டாவது நாளாக  நேற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் 32 மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் பங்கேற்றனர். 


இந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வை எப்படி  பாதுகாப்பாக நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழ்நிலை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விவரம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் தெரிவிக்கும் விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம்  தெரிவிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்

No comments:

Post a Comment