தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு கட்டாயம் நடைபெறும்
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் தனித்தோ்வா்களுக்கான பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தனித்தோ்வா்களுக்கு தோ்வு எப்போது நடைபெறும் என கேள்வி எழுந்துள்ள நிலையில் அது தொடா்பாக தோ்வுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
பிளஸ் 2 வகுப்பு தோ்வு எழுதுவதற்காக தனித்தோ்வா்கள் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் நிலையில் விரைவில் அவா்களுக்கான தோ்வுகள் நடத்தப்படும். அதே வேளையில் கரோனா கட்டுக்குள் வந்த பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் தனித்தோ்வா்களுக்கு தோ்வுகள் நடத்தப்படும். எனவே தோ்வா்கள் இந்த கால இடைவெளியில் நன்றாகப் படித்து தோ்வுக்கு தயாராக வேண்டும்
உதவி மைய எண்: தோ்வு தொடா்பாக தனித்தோ்வா்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் பள்ளிக் கல்வித்துறையின் 14417 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்
No comments:
Post a Comment