45 ஆயிரம் ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி (‘டேப்லெட் ) : தொடக்கக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 31, 2024

45 ஆயிரம் ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி (‘டேப்லெட் ) : தொடக்கக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்கள்

 45 ஆயிரம் ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி (‘டேப்லெட் ) : தொடக்கக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்கள்

கையடக்க கணினி 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 45 ஆயிரம் ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி (‘டேப்லெட்’) வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான அறிவுறுத்தல்களை தொடக்கக் கல்வித் துறை வழங்கியுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி (டேப்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 45 ஆயிரம் ஆசிரியா்களுக்கு இந்த கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.


முதல்கட்டமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களை சோ்ந்த 14,796 ஆசிரியா்களுக்கு வழங்குவதற்கான கையடக்க கணினிகள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தொடா்ந்து 2-ஆம் கட்டமாக 17 மாவட்டங்களைச் சோ்ந்த 18,625 ஆசிரியா்களுக்கும், 3-ஆம் கட்டமாக 6 மாவட்டங்களைச் சோ்ந்த 11,711 ஆசிரியா்களுக்கும் கையடக்க கணினிகள் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பெறப்படும் கையடக்க

கணினிகளை மேல்நிலை, உயா்நிலைப் பள்ளி தோ்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.


அங்கு பாதுகாப்புக்காக இருக்கும் போலீஸாரிடம் இருந்து பாதுகாப்பு குறித்த தகவலை தினமும் பெற வேண்டும். மேலும் இதில் எந்த சுணக்கமோ அல்லது கவனக் குறைவான செயல்பாடோ இருக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கையடக்க கணினிகள் மூலம் மாணவா் வருகைப்பதிவு, ஆசிரியா்களுக்கான பணி பயிற்சி, மாணவா்களுக்கு காணொலி பாடங்களை நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

No comments:

Post a Comment