இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிக்கு மாற்றுவது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.
அதே வேளையில் முன்பருவக் கல்வி கற்கும் மூன்று வயதுக் குழந்தைகளின் மனநிலையை அறிந்து, அவர்களை உளவியல் ரீதியாக அணுக மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளார்கள் என்பதற்காக அரசு பணிமாற்றம் செய்வது கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினால், நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உபரி ஆசிரியர் பணியிடங்களை சமன் செய்யமுடியும். மேலும் குழந்தைகளின் உடல் நலம், மனநலனைக் கருத்தில்கொண்டு முன்பருவக் கல்வியான மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்திடவேண்டும்.
தற்போது மாண்டிசோரி பயிற்சி முடித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஓராண்டு காலப் பயிற்சியினை இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத கால பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியளித்து எடுக்கச் சொல்வது முறையான பயிற்சிக்கு இணையாக அமையாது.
குழந்தையை மையப்படுத்தும் கல்வி முறையாக அமைந்திடவும் குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் எண்ணத்தினை மறுபரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.
அதே வேளையில் முன்பருவக் கல்வி கற்கும் மூன்று வயதுக் குழந்தைகளின் மனநிலையை அறிந்து, அவர்களை உளவியல் ரீதியாக அணுக மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளார்கள் என்பதற்காக அரசு பணிமாற்றம் செய்வது கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினால், நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மிகுந்த மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உபரி ஆசிரியர் பணியிடங்களை சமன் செய்யமுடியும். மேலும் குழந்தைகளின் உடல் நலம், மனநலனைக் கருத்தில்கொண்டு முன்பருவக் கல்வியான மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்திடவேண்டும்.
தற்போது மாண்டிசோரி பயிற்சி முடித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஓராண்டு காலப் பயிற்சியினை இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத கால பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியளித்து எடுக்கச் சொல்வது முறையான பயிற்சிக்கு இணையாக அமையாது.
குழந்தையை மையப்படுத்தும் கல்வி முறையாக அமைந்திடவும் குழந்தைகளின் மனநலனைக் கருத்தில் கொண்டு இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் எண்ணத்தினை மறுபரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment