பள்ளி கல்வி துறை சார்பில் 2019-20ம் கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடும் வகையில் தமிழக அரசு மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்ட 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் 4.5.2018 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2019-20ம் கல்வியாண்டிற்கு ரூ195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டுதான் 3ம் தேதி (நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சி துறையுடன் பள்ளி கல்வித்துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் பள்ளி துவங்கிய முதல் நாளே (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளி கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா ராணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் பழனிசாமி ஆகியோர் கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடும் வகையில் தமிழக அரசு மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்ட 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் 4.5.2018 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2019-20ம் கல்வியாண்டிற்கு ரூ195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டுதான் 3ம் தேதி (நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சி துறையுடன் பள்ளி கல்வித்துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் பள்ளி துவங்கிய முதல் நாளே (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளி கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா ராணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் பழனிசாமி ஆகியோர் கொண்டனர்.
No comments:
Post a Comment