அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்துடன் யோகாவை சேர்ப்பதற்கான திட்டம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.
பனாஜியில் நேற்று அளித்த பேட்டியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி, இந்தாண்டு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு 177 நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டு 200 நாடுகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகளின் உடற்கல்வி பாடத்திட்டத்துடன், யோகாவையும் கட்டாயமாக்கும் திட்டம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்
பனாஜியில் நேற்று அளித்த பேட்டியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி, இந்தாண்டு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு 177 நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டு 200 நாடுகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகளின் உடற்கல்வி பாடத்திட்டத்துடன், யோகாவையும் கட்டாயமாக்கும் திட்டம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்

No comments:
Post a Comment