இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளிகளுக்கு அருகில் இருக்கக்கூடிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவ, மாணவியரிடையே சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி நேரம் முடிந்த பின், மாணவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து 15 நிமிட இடைவெளியில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் அனுமதிக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment