அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஜனவரி 4- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வரும் ஜனவரி 3-ஆம் தேதி திறக்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஞாயிறன்று கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 'தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜன.2ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜன.4 திறந்திட வேண்டும்.
2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்பதால் இந்த கோரிக்கையிற் பரிசீலிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஜனவரி 4- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கபப்டும் என்று திங்கள் மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு நாள் கூடுதல் விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வரும் ஜனவரி 3-ஆம் தேதி திறக்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஞாயிறன்று கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 'தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜன.2ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜன.4 திறந்திட வேண்டும்.
2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்பதால் இந்த கோரிக்கையிற் பரிசீலிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஜனவரி 4- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கபப்டும் என்று திங்கள் மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு நாள் கூடுதல் விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment