இன்று சூரிய கிரகணம் :வெறும் கண்களால் பார்க்க கூடாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 25, 2019

இன்று சூரிய கிரகணம் :வெறும் கண்களால் பார்க்க கூடாது

சூரியன்-சந்திரன்-பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படும் சூரிய கிரகணம் இன்று வானில் தோன்றுகிறது.



  பூமியும், சந்திரனும் சூரியனுக்கு நேராக ஒரே நேர்க் கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைத்து பூமியில் வெயில் விழாதபடி மறைக்கும். இந்த நிகழ்வு இன்று நடக்கிறது.


 சூரியனை விட சந்திரன் அளவு குறைவாக இருப்பதால் முழுமையாக சூரியனை மறைக்காது. அதனால் சூரியனின் விளிம்புப் பகுதி வெளியில் தெரியும். அதனால். சூரியனை சுற்றி சிவப்பு நிறத்துடன் கூடிய வட்ட வடிவ வளையம் தோன்றும். இதுவே சூரிய கிரகணம்.



இதை நாம் நேரடியாக வெறும் கண்களால் பார்க்க கூடாது.  இன்று காலை 8.08 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் 11.19 மணி வரை நீடிக்கும். குறிப்பாக 9.35 மணிக்கு நேராக வரும் சந்திரன் சூரியனை மறைக்கும்.


 இந்த நிகழ்வு சுமார் 3 நிமிடங்கள் நீடிக்கும். தமிழகத்தில் இந்த நிகழ்வை ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும்.


 இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்க சென்னை கோளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தொலை நோக்கியில் பார்க்க சிறப்பு ஏற்பாடுகளை கோரங்கள் அதிகாரிகள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment