நாசிக்கில் கரன்சி அச்சடிப்பது நிறுத்தம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 23, 2020

நாசிக்கில் கரன்சி அச்சடிப்பது நிறுத்தம்

நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ஐ.எஸ்.பி.) மற்றும் கரன்சி நோட்டு பிரஸ்(சி.என்.பி.) மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.எஸ்.பி. பிரிவில் 1,900 ஊழியர்களும், சி.என்.பி. பிரிவில் உள்ள 2,100 ஊழியர்களும் இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர்.


 மார்ச் 31ம் தேதி வரை இவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்றும் தீயணைப்பு படையினர், செக்யூரிட்டி கார்டுகள் மற்றும் அத்தியாவசிய சேவை தொழிலாளர் மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் ஐ.எஸ்.பி. தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் கோட்சே நேற்று கூறினார். இதற்கு முன்பு 1979ல் ஸ்டிரைக் காரணமாக ஐஎஸ்பி, சிஎன்பி பிரிவுகள் ஒரு மாதம் மூடப்பட்டன.

No comments:

Post a Comment