கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 9, 2020

கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

 ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது


கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்

 2000 கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை  ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


 பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்ட உடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment