விண்வெளி அறிவியல் தொடர் பான ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க இஸ்ரோ அழைப்பு
விண்வெளி அறிவியல் தொடர் பான ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போதைய அசாதாரண சூழ லில் பள்ளி மாணவர்கள் தங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பங்கேற் கலாம்.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்து களை முன்வைத்து ஓவியம், கட்டுரை எழுதுதல், விநாடி - வினா மற்றும் மாதிரி அமைப்புகள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் வகுப்புவாரியாக நடத்தப்படும்.
கடைசி நாள் ஜூன் 24
விருப்பமுள்ள மாணவர்கள் https://www.isro.gov.in/icc-2020 என்ற இணையதளம் வழி யாக ஜூன் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி (080 2351 5850) அல்லது மின்னஞ்சல் (icc-2020@isro.gov.in) மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இதன் மூலம் மாணவர்களிடம் விண் வெளி அறிவியல் குறித்த ஆர்வம் அதிகரிப்பதுடன், அவர்களின் படைப்பாற்றலும் மேம்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது
விண்வெளி அறிவியல் தொடர் பான ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போதைய அசாதாரண சூழ லில் பள்ளி மாணவர்கள் தங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பங்கேற் கலாம்.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்து களை முன்வைத்து ஓவியம், கட்டுரை எழுதுதல், விநாடி - வினா மற்றும் மாதிரி அமைப்புகள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் வகுப்புவாரியாக நடத்தப்படும்.
கடைசி நாள் ஜூன் 24
விருப்பமுள்ள மாணவர்கள் https://www.isro.gov.in/icc-2020 என்ற இணையதளம் வழி யாக ஜூன் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி (080 2351 5850) அல்லது மின்னஞ்சல் (icc-2020@isro.gov.in) மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இதன் மூலம் மாணவர்களிடம் விண் வெளி அறிவியல் குறித்த ஆர்வம் அதிகரிப்பதுடன், அவர்களின் படைப்பாற்றலும் மேம்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

No comments:
Post a Comment