மாணவர்கள் மனநிலையை மாற்ற 'டேக் இட் ஈஸி!' 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஆலோசனை வரும்: சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் மனநிலையை சீரமைக்க, பரிசு வழங்கும் திட்டத்துடன், 'மிஸ்டு கால்' மூலம் 'டேக் இட் ஈஸி' ஆலோசனை நிகழ்ச்சியை கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது.
.இதன்படி, 92666~17888 என்ற எண்ணுக்கு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், 'மிஸ்டுகால்' அளிக்கலாம். அதைத்தொடர்ந்து, இலவச இணைப்பு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு மாணவர்களுக்கு வருகிறது.
இதில் தேர்வு குறித்து, கதையாக ஒரு உரையாடல் மற்றும் மாணவர்களுக்கான வினா விடை, சந்தேகங்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. தற்போது, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முழுமையாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், தேர்வுக்கு முழுமையாக இருந்த மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது.மேலும், தேர்வு இல்லாததால், அடுத்தகட்ட நிலை குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலையிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதற்கும், வழிசெய்யும் வகையில், 'டேக் இட் ஈஸி', 'மிஸ்டு கால்' நிகழ்ச்சியை மாற்றி அமைத்து கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் வழக்கம் போல் அந்த எண்ணுக்கு 'மிஸ்டுகால்' வழங்கலாம்.அதிலிருந்து வரும் அழைப்பில், கருத்துடன் கூடிய உரையாடல் நிகழ்த்தப்படுகிறது.
அந்த உரையாடல் குறித்து, மாணவர்களின் கருத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். சிறந்த கருத்துகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதாக, இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment